Posts

Showing posts from July, 2025

சாரல் 16

Image
சாரல் 16 காலை நிதானமாக எழுந்த ராகினி நான்கு நாட்களுக்குப் பின் நிம்மதியாக குளித்தாள். என்ன தான் ரவீந்தர் கேம்ப்பர் வேனின் வெளியே ஷவர் வைத்து அவளை மறைக்க பிளாஸ்டிக் பேனல் வைத்துக் கொடுத்திருந்தாலும் ஒரு குளியலறையில் நிம்மதியாக குளிக்கும் தன்மை அதில் கிடைக்கவில்லை. குளித்து முடித்து தயாரானதும் நேராக ரவியிடம் வந்து நின்றாள். "அண்ணா நான் பக்கத்து வீட்டு அக்கா கூட பின்னாடி இருக்குற அந்த மலை.. மலைதானே அது.. அங்க வரைக்கும் போயிட்டு வர்றேன்." என்று கதவைத் தாண்டிப் போக முயல, "அங்க போகணும்ன்னா நம்ம இடத்துகுள்ள நேரா தான் போகணும். வெளில போய் போக முடியாது மா." என்றான் அக்கறையாக. "அது தெரியும். அந்த அக்காவை கூட்டிட்டு வர்றேன்." என்று அவள் கிளம்ப, சட்டென்று நினைவு வந்தவனாக, "அவங்க தம்பி இருப்பான், அவனை வர சொல்லு மா. சின்ன வேலை இருக்கு." என்று சொல்லிவிட்டு காலையில் தான் உண்ண உணவை தயார் செய்ய ஆரம்பித்தான். ஏனெனில் முதல் நாளில் இருந்து அந்த பக்கத்து வீட்டுப் பெண் ராகினிக்கு உணவு கொடுத்து விடுகிறாள். இவனுக்கும் அவளை கெஞ்சி உண்ண வைக்க நேரமில்லை. அதனால் க...

சாரல் 15

Image
சாரல் 15 ரவீந்தர் அன்றைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் கண்டெய்னரின் மேல் ஏறிப் படுத்திருந்தான். அலுவலக மொழிப்படி கூறுவதானால் அது அவனின் மொட்டை மாடி. காலை முதலே வேலை கடுமையாக இருந்தது. உடல்வலி அவனுக்கு சொல்ல முடியாத அளவில் இருக்க, இந்த ஊரின் பனியையும் பொருட்படுத்தாது வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். அவனின் பல நாள் ஆசை இந்த கன்டெய்னர் வீடு. ஆளில்லாத ஓரிடத்தில் அவன் மட்டும் வாழ ஆசைப்பட்டு, அது எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தானோ அப்படியே இன்று அவன் கண் முன் எழுந்து நிற்கிறது. ஆனால் அவன் எதிர்பாராத சூழ்நிலை தான் அவனை அதனை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுத்துக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக ராகினி. தந்தையும் தாயும் அவளை வளர்த்து வைத்திருக்கும் விதத்தில் அவனுக்கு மயக்கம் வராத குறை தான். ஏதோ இரண்டு நாட்களாக அவள் அமைதியாக உலவி வருகிறாள். காரணம் பக்கத்து வீட்டுப் பெண் என்பது வரை தெரிந்து கொண்டிருந்தான். முகம் தெரியாத அப்பெண் தன் தம்பிக்கு அறிவுரை கூற, தான் மாறியது போலவே அவள் பேச்சைக் கேட்டு ராகினியும் சற்று அமைதியானதில் ரவிக்கு பெருத்த நிம்மதி. பெரியப்பா நாளை ...

சாரல் 14

Image
சாரல் 14 வீடு நோக்கி வாடி வதங்கி நடந்து வந்து கொண்டிருந்தார் சரோஜா. பக்கத்து நிலத்தில் திடீரென்று முளைத்திருந்த இரண்டடுக்கு இரும்பு வீட்டைக் கண்டு திகைப்புடன் தான் வீட்டினுள் நுழைந்தார். எழில் தன் கைவேலையில் கவனமாக இருந்தவள் அன்னை வரவே அவருக்கு தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்தாள். சரோஜா முன் வைத்துவிட்டு அவள் தன் வேலையைத் தொடர, புகழ் வேகமாக வீட்டினுள் வந்தான். "அக்கா நீ சொன்னது ரொம்ப சரிக்கா. அவர் கீழ் போர்ஷன் கன்டெய்னர் ரெடிமேடாக வாங்கி இருக்கார். ஆனா மேல் போர்ஷன் இனி தான் அவரே ரெடி பண்ண போறாராம். அதை அவரோட சேனல்ல தினமும் போடப் போறாராம்." என்று கூறி அவளருகில் அமர, "என்ன டா அது திடீர்னு என்னத்தையோ கொண்டு வந்து வச்சிருக்கான் பக்கத்து இடத்துக்காரன். மின்னல் எதுவும் இரும்பைத் தாக்க வர்றேன்னு நம்ம வீட்டுப் பக்கம் வராதே?" என்று தங்கள் நலத்தை உறுதிபடுத்திக் கொள்ள கேள்வி கேட்டார் சரோஜா. "அம்மா கன்டெய்னர் வீடுகள் எல்லாம் ஷாக் புரூஃப், எர்த்குவேக் புரூஃப் கூடவே இடி மின்னல் எதுவும் தாக்காது. தண்ணி உள்ள வராது. ரொம்ப ரொம்ப பாதுகாப்பானது." என்று அதற்கு அ...

சாரல் 13

Image
சாரல் 13 ரவீந்திரன் காலை முதலே வேலையாட்களுடன் பிஸியாக இருந்தான். ராகினியை அழைத்து கைடு ஒருவருடன் டாப்சிலிப் அனுப்பி வைக்கவா என்று அவன் வினவ, அவளோ முறைத்தபடி," சீக்கிரம் வேலையை முடி ஊருக்கு போவோம். எனக்கு சென்னை தான் செட் ஆகும்." என்று சொல்லிவிட்டு போனும் கையுமாக வேனில் அமர்ந்து கொண்டாள். அவளது வாடிக்கை இது என்று ரவியும் அவளை கண்டுகொள்ளாது விட்டுவிட்டான். முதலில் டாய்லெட் கட்டுவதற்கு எக்ஸ்கவெட்டர்( ஜேசிபி என்பது அந்த இயந்திர நிறுவனத்தின் பெயர்) கொண்டு ஆழமான குழி தோண்டப்பட்டதும் ஒரு லாரி மூலமாக பயோ செப்டிக் டேங்க் கொண்டு வரப் பட்டது  இது வாழ்நாள் முழுவதும் நிறையவே நிறையாத கழிவு நீர் தொட்டி என்று அதன் உற்பத்தியாளர் சொல்லவும் முதலில் ஆச்சரியம் அடைந்தான். ஏனெனில் சென்னை பெருநகரில் ஒவ்வொரு வீட்டின் செப்டிக் டேங்க்கும் வருடத்திற்கு இருமுறையேனும் கழிவு நீர் ஊர்தி கொண்டு காலி செய்யப்படும். அதுவே அப்பார்ட்மெண்ட் என்றால் அதன் எண்ணிக்கை பொறுத்து, வாரம், ஏன் தினமும் கூட கழிவு நீர் அகற்றம் நடைபெறும். அப்படியிருக்க அவர்கள் குறிப்பிட்ட பயோ செப்டிக் டேங்க்கின் மீது ஆர்வம் ஏற்பட்டு...

சாரல் 12

Image
    சாரல் 12   மறுநாள் விடியல் அனைவருக்கும் இயல்பாக தத்தமது வேலைகளுடன் கழிய புகழ் மட்டும் அதிசயமாக வீட்டில் இருந்தான் .   அவனை பார்த்தபடியே சாமிக்கு பூ வைத்து பூஜித்த ஶ்ரீதரன் , வெளியில் இருக்கும் விளக்குப் பிறையில் பணத்தை வைத்துவிட்டு ,   " செல்லம் , உன் தம்பிக்கு விளக்கு மாடத்துல காசு வச்சிருக்கேன் . எடுத்துட்டு கிளம்ப சொல்லு .” என்று உரக்க கூறினார் .   எழில் அவ்விடம் இல்லாததால் அவருக்கு பதில் வராமல் போக , புகழ் எழுந்து தந்தையிடம் வந்தான் .   " அப்பா , நான் தப்பு பண்ணினேன் தான் . ஆனா இப்போ மாறிட்டேன் பா . உள்ளூர்ல வேலை கிடைக்க மாட்டேங்குது பா . நேத்து அக்கா கூட கடை வைக்க இடம் பார்க்க போன இடத்தில அவமானம் . என் நண்பன் கிட்ட வேலைக்கு கேட்டதுக்கு மானங்கெட்டு போச்சு பா . நான் வெளியூர் போய் ஒழுங்கா படிச்சு சம்பாதிச்சு கடனை அடைக்கிறேன் பா . என்னை நம்பி அனுப்புங்க பா " என்று நா தழுதழுக்கக் கூறினான் .   அவனை ஆழ்ந்து நோக்கிய ஶ்ரீதரன் , " நீ சொ...