இடுகைகள்

Jeyalakshmi Karthik Novels லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 77 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 77   "வாங்க, உள்ள கூட்டிட்டு வாங்க" என்று மகிழ்வாய் அழைத்தார் வைதீஸ்வரி.   அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை ரகுராம் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் மனைவியின் முகத்தை வாஞ்சையாக பார்த்துக் கொண்டிருக்க,   "நீங்க வந்தவங்களை கவனிக்காம இங்க என்ன பாத்துட்டு இருக்கீங்க?" என்று அவர் அதட்டவும் ரவியின் புதிய வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்களை வரவேற்று காலை உணவுக்கு அழைத்துச் சென்றார்.   வைதீஸ்வரி அத்தனை மகிழ்வாய் வீட்டிற்குள் முதலில் அழைத்தது வேறு யாரையும் அல்ல, ரவியும் எழிலும் புதிதாக வாங்கிய நாட்டு மாடும் அதன் சிறு கன்றையும் தான்.   புதுமனைக்கு பசுவை அழைப்பது மரபு என்பதாக அன்று பேச்சு வாக்கில் அவர் உரைத்திருக்க, ரவி உடனடியாக நல்ல விற்பனையாளரை சந்தித்து புது வீட்டிற்கு செல்லும் போது அவர்களுடைய பசுவையே அழைத்துச் செல்ல திட்டமிட்டு விட்டான்.   பிள்ளை இல்லாத அந்த அன்னையின் மனம் குளிர்ந்து போனது. "எப்படியும் கொஞ்ச நாள்ல வாங்க நினைச்சது தான் பெரியம்மா. இப்ப பாருங்க என்னோட கனவான தற்சார்பு வாழ்க்கை முறைக்கு முழுசா வந்தாச்சு.   ...

சாரல் 76 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 76   வாசலில் வந்து நின்ற சரோஜாவை கண்டு அனைவரும் புரியாது விழிக்க, முதலில் சுயவுணர்வுக்கு வந்தது வைதீஸ்வரி தான்.   "வாங்க சம்மந்தி அம்மா" என்று அழைத்து வரவேற்பாக முன்னே சென்றார்.   ராகினி யார் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்று நாசூக்கு பார்க்கும் ரகமல்ல என்பதால் அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.   புகழும் எழிலும் அமைதியாக நிற்க, ஶ்ரீதர் மருமகளைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.   வந்த சரோஜா நேராக மகனிடம் சென்று நின்றார்.   "கடனெல்லாம் கட்டிட்டன்னு அதோட என்னை மறந்துட்டல்ல புகழு? அம்மா என்ன செய்யிறேன்னு பார்க்க கூட வரலையே!" என்று கண்ணீரை முந்தானையில் துடைத்தார்.   புகழுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் வீட்டில் நல்ல விஷயங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இப்பொழுது இவரோடு சண்டையிட்டு நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.   அதனால் அவன் அமைதியாக நின்றான்.   "இரண்டு நாள் முன்ன வீட்டு ஓனர் வந்திருந்தாரு புகழு. அவருக்கு ஏதோ புது வீ...

சாரல் 74 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 74   எழிலும் ரவியும் ஊர் திரும்பி இருந்தனர். ரகுராமிடம் அமைதியாக நடந்தவைகளை விளக்கினான் ரவி.   அவர் கூட அமைதியாக அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டார். ஆனால் வைதீஸ்வரி மிகவும் உடைந்து போனார்.   "யாருக்கு என்ன பாவம் செய்தோம் மா நாம? தம்பிக்கு அறிவு இருந்தது திறமை இருந்தது நேர்மை இருந்தது, அதோட சேர்த்து தன் உழைப்பையும் போட்டு தானே பணம் சம்பாதிச்சாரு. யாரையும் அவர் ஏமாத்தலையே, ஏன் அந்த ஜனகராஜை கூட தம்பி ஏமாத்தலையே. அவன் பங்கு பணத்தை கொடுத்துட்டு தானே அவன் கையாடல் பண்றான்னு வெளில அனுப்பினார்? ஆனா மனித மனம் எவ்வளவு இழிவா இருக்கு பாரு எழில்! தனக்கு நேர்மையா இருந்தவனை ஏமாற்றின குற்றவுணர்வு இல்லாம தன் மனைவி முன்ன முகத்திரையை கிழிச்சிட்டான்னு தம்பியையும் மேகலாவையும் கொன்னு, ரவியை இப்படி ஏமாத்தி பணத்தை பிடுங்கி. அது போதாதுன்னு ராகினி வாழ்க்கையைக் கெடுக்க நினைச்சு. நல்ல வேளை அவனுக்கு ஒரு பொண்ணு இருக்க போய் ராகினியை நாசம் பண்ணுற எண்ணம் அவனுக்கு வரல போல. இல்லன்னா அந்த ஈனப் பய அதையும் செய்திருப்பான்" என்று கண்ணீரில் வாய் ஓயாமல் அழுது கரைந்தார்.   "நம்மளால ...

சாரல் 73 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 73 பணம் கடனாக ஜனகராஜ் கேட்டிருந்தால் கண்டிப்பாக உதவி செய்திருப்பார் பரசுராம். ஆனால் தன்னுடைய பங்குதாரர் என்று கூறி ஒரு நிறுவனத்தில் பணம் பெற்றுச் சென்றது அவருக்கு மிகப் பெரிய அவமானமாகவும் அவமரியாதையாகவும் இருந்தது.  ஏற்கனவே பல முறை ஜனகராஜை காஸ்மோ கிளப்பில் பார்த்திருக்கிறார். அன்றும் தனது கோபத்தை அவரிடம் வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த இடம் அதுவாகவே இருக்க, இவர் சென்ற போது ஜனகராஜ் மாவட்ட டி.எஸ்.பியுடன் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். ஜனாவிடம் பேசிவிட்டு அவர் சரிவராவிட்டால் போலீஸில் புகார் கூறும் எண்ணத்தில் இருந்தவர் இங்கே அவர் யாருடன் விளையாடுகிறார் என்று அறிந்து அது சரிவராது என்று எண்ணி கிளம்பி விட்டார். ஆனால் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் ஏற்கனவே தனது நிறுவனத்தில் கையாடல் செய்ததற்கான சாட்சியங்களை காட்டிவிட்டு, இப்பொழுது பொய்யுரைத்து மோசடி செய்ததையும் நிரூபித்து, போலீஸில் கூறினால் செல்வாக்கை பயன்படுத்தலாம்.  ஆனால் நேரடியாக சோஷியல் மீடியாவில் கூறிவிட்டால் ஜனகராஜின் மரியாதை கெடுவதோடு அவர்கள் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்ற ஒரே காரணத்தி...

சாரல் 72 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 72 தன் கைவளைவில் இருந்த மனைவியைக் கண்டு ரவியின் மனம் நிறைந்து இருந்தது. அன்று போனில் அவன் பேசி வைத்ததும் கடைசி பஸ்சில் ஏறி காலை விடியும்போது சென்னை வந்து விட்டாள். அதிகாலை அவளது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் அரைத்தூக்கத்தில் "என்ன இசை?" என்று கேட்டவனிடம் "கொஞ்சம் வேன் கதவைத் திறங்க சன்ஷைன்" என்றாள். பரபரவென்று எழுந்து கேம்பர் வேனின் கதவைத் திறக்க மலர்ந்த முகமாக கையில் பையுடன் நின்றிருந்தாள். அவளது வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ரவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான். அவளை அருகே இழுத்து மார்போடு அணைத்து நின்றபோது நேற்றிருந்த நிராதரவான மனநிலை காற்றில் மறைந்து யானை பலம் கூடியது போல உணர்ந்தான் ரவி. அவன் இயல்புக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. "எப்படி இசை?" என்று அவன் வியந்து கேட்க,  "நேத்து உங்களுக்கு பக்கத்துல நான் இருக்கணும்ன்னு தோனி இருக்கு. அதான் உங்களை அறியாம அது வெளில வந்தது. நானும் வந்துட்டேன்." என்று சின்னதாக சொல்லி முடித்தாள். அதன் பின் தான் பிரதீஷ் அவனிடம் காட்டிய கோப்புகள் பற்றி அவளுக்கு விளக்க, "எனக்கென்னவோ உங்க ம...

சாரல் 71 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 71 தன் எதிரில் அமர்ந்திருந்த தமக்கை மகனை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பத்ரி. மேகலா இருந்த போதும் அவர் ரவியை ரசித்ததில்லை. சிறுவயதில் பரசுராமும் மேகலாவும் பிள்ளையை வேலையாளிடம் விட்டுவிட்டு வெளியூர்களுக்கு செல்வது தெரிந்தும் தன்னிடம் குழந்தையை விட்டுச் செல் என்று பத்ரி பொறுப்பெடுத்ததில்லை. அவளிடம் பணம் இருக்கிறது அவள் பிள்ளையை பார்த்துக்கொள்ள ஆள் வைத்திருக்கிறாள் என்று எண்ணி ஒதுங்கியே இருந்து கொண்டார். இத்தனைக்கும் அவரிடமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு செல்வம் இருந்தது. ஆனால் ரகுராம் தனிமையில் வாடும் தம்பி மகனைக் கண்டு தானும் தன் மனையாளும் பிள்ளை இல்லாமல் தவிக்கும் நிலையில் அவரின் செயல் பிடிக்காமல் குழந்தையை தங்களுடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். பத்ரி ரவியை வளர்ந்த ஆண்மகனாக கண்டபோது உண்மையில் பூரித்துப் போனார். ஆனால் படித்து பட்டம் வாங்கியும் தந்தை தொழிலை கவனிக்காமல் அவன் ஊர் சுற்றுவதாக மேகலா வருந்தி சொன்னதைக் கேட்டதும் அவருக்கு அவன் மேல் நல்ல அபிமானம் வரவில்லை. இன்றும் தங்கையை அழைத்துக் கொண்டு சென்ற ரவி ஊரில் நிலம் வாங்கி ஏதோ செய்வதாக அவரின் மனைவி சில...

சாரல் 70 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 70   கணவனின் குரலில் இருந்த ஏக்கத்தைத் தாண்டிய ஆதரவைத் தேடும் விதமான உணர்வு எழிலிசையை சட்டென்று அசைத்துப் பார்த்து விட்டது.   இதுவே அவன் சாதரணமாக வினவி இருந்தால் அவள் சிரித்துக் கொண்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு நீங்க என்கிட்ட ஓடி வாங்க என்று கேலி செய்திருப்பாள். ஆனால் இந்த நொடி அவன் தேடுவது மனைவியை மட்டுமல்ல தோள் சாயத் தோழியும், அரவணைக்க அன்னையும், தாங்கிக் கொள்ள தந்தையும் என்று அவளது தேவை அவனுக்குத் தேவை என்று புரிந்து கொண்டாள்.   அமைதியாக, "போய் நல்லா தூங்கி எழுங்க. காலைல உங்களுக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்போ சோர்வு தான் உங்களை இப்படி பேச வைக்குது. மாமா அத்தை ரெண்டு பேரும் நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்பறம் இன்னிக்கு மதியம் ட்ரிப் இர்ரிகேஷன் செட் பண்ண வந்தாங்க. இன்னும் அந்த வேலை முடியல" என்று அவள் பேசிக்கொண்டே போக ஏனோ ரவியின் மனம் வருத்தம் கொண்டது.   தன் மனைவிக்கு ஏற்கனவே நிறைய பாரத்தை ஏற்றி வைத்து விட்டு இப்பொழுது அவளை இங்கே தேவையென்று தேடுவதும் அழைப்பதும் சற்றும் மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றியது. ஆனால் ...

சாரல் 69 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 69   பிரதீஷ் அழைத்து தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறியதும் ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை.   "என்ன கண்டுபிடிச்ச?" என்று அவன் ஆர்வமாக வினவ,   "போன்ல வேண்டாம் மாமா. நாம அதே இடத்துல மீட் பண்ணுவோம்" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட ரவிக்கு அங்கு சென்று அவன் வந்து சேரும் வரும் பரபரப்பாக இருந்தது.   பிரதீஷ் சற்று நேரம் சென்று தான் அங்கு வந்தான். கையில் சில பைல்களை அவன் வைத்திருக்க ரவி அவனிடம் ஆர்வமாக,   "என்னன்னு சொல்லு பிரதீஷ், எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு" என்று அவசரம் காட்டினான்.   "உங்களுக்கு ஏன் மாமா அந்த ஜனகராஜ் மேல சந்தேகம் வந்துச்சு?" என்று இவன் கேள்வி எழுப்ப,   "அதுக்கு தனிப்பட்ட காரணம் இல்ல. அவரோட ஒத்துவராம அப்பா அவரை விலக்கினதா அவர் சொல்லி கேட்டிருக்கேன். இத்தனை வருஷம் இல்லாம இப்ப திடீர்னு அவர் புது கம்பெனி, பிஸ்னஸ் எல்லாம் பார்க்கும் போது மனசுல ஒரு வித நெருடல். மத்தபடி அவர் மேல நான் சந்தேகப்பட சாலிடான எவிடென்ஸ் எதுவும் இல்ல" என்றான் தாடையை தேய்த்தபடி.   "இப்போ இருக்கு." என்று தன்...