இடுகைகள்

மேற்கே உன் சாரல் மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 64 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 64   தனக்கான உடைகளை எடுத்து அடுக்கும் மனைவியை பெருமிதமும் ஏக்கமுமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரவீந்தர்.   அவன் பார்வை வீச்சை தாள முடியாமல், “சன்ஷைன்” என்று அவன் மீது ஒரு துண்டை வீசி எறிந்தாள் எழில்.   அவன் அதற்காகவே காத்திருந்தவன் போல அவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு,   "அவசியம் போகணுமா? அதுவும் தனியா?" என்று அவளது செவிமடல்களை தன் உதடுகளால் உரசியபடி வினவ,   எங்கோ பறந்து சென்ற மனதை கட்டி நிறுத்திய எழில் தன் கணவனை முன்னே இழுத்து அமர்த்தினாள்.   "என்னப்பா ஏதோ குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க? இங்க உள்ளதை வீடியோ எடுத்து போட்டதுக்கு, வேலை செஞ்சதுக்கு சின்ன பிரேக் மாதிரி நெனச்சு சென்னை டிரிப் போயிட்டு வாங்க." என்று அவன் சிகையை வருட,   "நான் போக மாட்டேன்னு சொல்லல இசை... நீயும் வா!" என்று குழந்தையாக சிணுங்கினான்.   "எவ்வளவு மெச்சூர்டு பர்சன் நீங்க. ஏதோ விடலை பையன் மாதிரி நடந்துக்கறது நல்லாவே இல்ல." என்று பொய்யாய் கோபம் காட்டி கைகளைக் கட்டிக்கொண்டு அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்றாள்.   அவள் கோபத்த...

சாரல் 20 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 20   " இன்னும் ஏன் இங்கேயே சுத்திகிட்டு இருக்க ? போ என் கண்ணுல படாம போய் தொலை ." என்று எதிரில் நின்ற மகன் மேல் மொத்த கோபத்தையும் கொட்டி விட்டு திண்ணை ஓரத்தில் சாய்ந்து அமர்ந்தார் ஶ்ரீதரன் .   இவன் ஒருவனை மையமாக வைத்து சரோஜா செய்த செயல்கள் தான் எத்தனை ? நல்லது செய்கிறாள் என்று நம்பி அவளுக்கு துணை போய் , இன்று அவமானப்பட்டு நிற்கும் போது விழித்துக் கிடக்கும் புத்தி அன்று அவள் ஆடியபோது ஏன் உறங்கிக் கொண்டிருந்தது என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு அப்படியே சரிந்து படுத்தார் .   புகழ் அவர் அருகில் வந்து மன்னிப்பு வேண்டியதோ , அவர் அவனை கவனிக்காமல் இருந்ததால் அழுதபடி வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனதோ அவர் அறியவில்லை .   இந்த வீட்டில் நிலவரம் இப்படி இருக்க , பெரியப்பா பெரியம்மா வந்ததும் அவர்களை உபசரித்து விட்டு அருகில் அமர்ந்தான் ரவீந்தர் .   " இந்த இடம் போதுமா ரவி ?" என்று மனம் பொறுக்காமல் வினவினார் வைதீஸ்வரி .   " பெரியம்மா வீடு சின...