இடுகைகள்

merke-un-saralmazhai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 22 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 22   வேகமாக வீட்டின் பக்கவாட்டு வழியாக வேலியின் ஓரம் ஓடினாள் எழில்.   வேலியைப் பற்றிக்கொண்டு பார்த்த பொழுது அந்த மையிருட்டிலும் ரவியும் அவனோடு இருவரும் எதையோ தேடுவது நன்றாகப் புலப்பட்டது.   யோசிக்காமல் கேட்டை நோக்கி நடந்தாள். பதற்றமாக ரவி அங்கும் இங்கும் அலைந்தபடி கைபேசியை காதில் வைத்துக்கொண்டு இருந்தான்.   "ரவி சார்! ரவி சார்! என்னாச்சு?" என்றபடி அவள் உள்ளே வர,   "இசை, இசை உன்னோட தானே ராகினியை அனுப்பி வச்சேன், அவ எங்க?" என்றான் பதற்றமாக.   "நாங்க திரும்பி வந்து ரொம்ப நேரம் ஆகுதே சார். இப்போ போய் ராகினியை என்கிட்ட விசாரிக்கிறீங்க?" என்று புரியாமல் வினவினாள் எழில்.   "அவ வரல இசை. நாங்க கேம்பெர் வேன்ல கிடந்த க்வில்ட்டை பார்த்து, அவ தூங்கிட்டான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ தான் பெரியம்மா அவளை சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தாங்க. ஆனா அங்க போர்வை தான் சுருண்டு இருந்திருக்கு. நான் தான் அவ தூங்கறதா தப்பா நினைச்சு இருந்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சு சொல்லு இசை. அவ ஏதாவது சொன்னாளா?" என்று படபடத்தான்.   "கால்...

சாரல் 19 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 19 எழிலும் ராகினியும் அந்த கரடு முரடான பாதையில் நடந்து கொண்டிருந்தனர். "என்னக்கா இவ்வளவு முள்ளுச்செடியா இருக்கு. எனக்கு இதெல்லாம் பிடிக்காது, வாங்க திரும்பிப் போகலாம்." என்று முகத்தை சுருக்கிப் பேசிய ராகினியைக் கண்டு மெல்லச் சிரித்தாள் எழில். "உனக்கு எப்பவும் எல்லா இடத்திலும் நீ எதிர்பார்க்கற விஷயம் மட்டுமே கிடைக்காது ராகினி. அதுக்காக போக வேண்டிய தூரத்தை கடந்து போகாம இருந்தா வாழ்க்கை தேங்கி போயிடும். சின்ன சின்ன தடைகளை தாண்டி போய் ஜெய்க்கிறது தான் வாழ்க்கை." என்று சொல்லி அவள் முன்னே நடக்க, "அக்கா வழி இல்லன்னு சொன்னதுகெல்லாம் வாழ்க்கை பாடம் எடுக்காதீங்க கா" என்று சிணுங்கினாள். "நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு நாளும் நமக்கு பாடம் தான் ராகினி. எப்ப என்ன வரும்னு தெரியாத இந்த சுவாரசியமான வாழ்க்கை தான் நம்மளை உயரத்துக்கு கொண்டு போகும். ஏறி ஏறி இறங்கி போற ஈசிஜி தான் உயிரோட மதிப்பு சொல்லும். நேர்கோடா போனா செத்துட்டதா அர்த்தம்." என்று எழில் மீண்டும் தத்துவம் பேச, "ஏன் இப்படி அறுக்குறீங்க இன்னிக்கு?' என்று தலை மேல் கை வைத்து வராத அழுகை...

சாரல் 18 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 18 எழிலிசையின் பேச்சைக் கேட்டதில் அவள் பல நாட்களாக தன் சேனலை தொடர்ந்து பார்த்து வருவது ரவீந்தரால் உணர முடிந்தது. அவள் பேசிக்கொண்டிருந்த போது ராகினி அங்கு வந்து சேர்ந்தாள். போகலாமா என்று அவள் வினவ, "சரி சார் நான் கிளம்பறேன். எப்பவும் அதே சார்ம்மோட உங்க வீடியோஸ் போடுங்க." என்று விடைபெற்ற எழில் ராகினியுடன் அவர்கள் இடத்தின் உள் பக்கம் பார்த்து நடக்கத் துவங்கினாள். மிகவும் நல்ல மனதுடைய பெண் என்று ரவீந்தர் எண்ணிக்கொண்டு அன்றைய வேலைகள் முடிந்து விட்டதா என்று கடைசியாக ஒருமுறை பார்வையிட்டு விட்டு வந்தான். உடல் அலுப்பு தீர சூடான நீரில் குளித்துவிட்டு வந்தவன் தன் கைபேசியில் பெரியப்பாவின் அழைப்புகள் நான்கு விடுபட்டு இருப்பதைக் கண்டு உடனே அவரை தொடர்பு கொண்டான். "என்னாச்சு பெரியப்பா?" என்று எடுத்தும் அவன் பதற்றத்துடன் வினவ, "ஏன் கண்ணா பதறி போய் பேசுற? ஒன்னும் இல்ல பா. நானும் ஈஸ்வரியும் சேதுமடை வந்துட்டோம். இடம் தெரியல, அதான் உன்கிட்ட லொகேஷன் கேட்க போன் பண்ணினேன்." என்றார் நிதானமாக "என்ன பெரியப்பா, கிளம்பும்போதே சொல்லி இருக்கலாம்ல?", என்று அவன...

சாரல் 17 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 17 ராகினியை அனுப்பிவிட்டு எப்பொழுதும் போல திண்ணையில் அமர்ந்து தன் எம்பிராய்டரி வேலையை ஆரம்பித்த எழிலுக்கு அவள் எண்ணமாகவே இருந்தது. சின்னக் குழந்தை போல கோவித்துச் சென்றவள் முகம் மீண்டும் மீண்டும் எழ, விரைவாக வேலையை முடித்து இருள் வருவதற்குள் அவளை அந்த மலைக்கு அழைத்துச் சென்று காட்டி விட முடிவு செய்து கொண்டாள். அதன் பின் அவள் கைகள் வேலையை அத்தனை வேகமாகவும் நேர்த்தியாகவும் செய்யத் துவங்கியது. முதலில் இதில் என்ன வருமானம் வந்து விடப் போகிறது என்று விளையாட்டாக அவள் கற்ற கலை தான் இந்த கை எம்பிரய்டரி, அதை போலவே ஆரம்பத்தில் அவள் அதனை செய்து முடித்தபோது இந்த மலை கிராமத்தில் வாங்குவோர் யாரும் இல்லை. ஆனால் அதனை அடிக்கடி போட்டோ எடுத்து இது போன்ற கைவினைப் பொருட்கள் விற்கும் தளத்தில் அவளது பெயரில் பதிவேற்றம் செய்து வைக்க, சேலத்தை தலைமையகமாக கொண்டு விளங்கும் ஒரு பரிசுப் பொருள் நிறுவனம் அவளை நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் அளிக்கும் பிரத்யேக பரிசுப் பொருட்களுள் அவளது எம்பிரய்டரியையும் பிரேம் செய்து விற்பனை செய்ய விரும்புவதாகவும் அவளுக்கு ஒரு எம்பிரய்டரிக்கு இத்தனை என்று பணமதிப்பு கூறவ...

சாரல் 16 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 16 காலை நிதானமாக எழுந்த ராகினி நான்கு நாட்களுக்குப் பின் நிம்மதியாக குளித்தாள். என்ன தான் ரவீந்தர் கேம்ப்பர் வேனின் வெளியே ஷவர் வைத்து அவளை மறைக்க பிளாஸ்டிக் பேனல் வைத்துக் கொடுத்திருந்தாலும் ஒரு குளியலறையில் நிம்மதியாக குளிக்கும் தன்மை அதில் கிடைக்கவில்லை. குளித்து முடித்து தயாரானதும் நேராக ரவியிடம் வந்து நின்றாள். "அண்ணா நான் பக்கத்து வீட்டு அக்கா கூட பின்னாடி இருக்குற அந்த மலை.. மலைதானே அது.. அங்க வரைக்கும் போயிட்டு வர்றேன்." என்று கதவைத் தாண்டிப் போக முயல, "அங்க போகணும்ன்னா நம்ம இடத்துகுள்ள நேரா தான் போகணும். வெளில போய் போக முடியாது மா." என்றான் அக்கறையாக. "அது தெரியும். அந்த அக்காவை கூட்டிட்டு வர்றேன்." என்று அவள் கிளம்ப, சட்டென்று நினைவு வந்தவனாக, "அவங்க தம்பி இருப்பான், அவனை வர சொல்லு மா. சின்ன வேலை இருக்கு." என்று சொல்லிவிட்டு காலையில் தான் உண்ண உணவை தயார் செய்ய ஆரம்பித்தான். ஏனெனில் முதல் நாளில் இருந்து அந்த பக்கத்து வீட்டுப் பெண் ராகினிக்கு உணவு கொடுத்து விடுகிறாள். இவனுக்கும் அவளை கெஞ்சி உண்ண வைக்க நேரமில்லை. அதனால் க...

சாரல் 13 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 13 ரவீந்திரன் காலை முதலே வேலையாட்களுடன் பிஸியாக இருந்தான். ராகினியை அழைத்து கைடு ஒருவருடன் டாப்சிலிப் அனுப்பி வைக்கவா என்று அவன் வினவ, அவளோ முறைத்தபடி," சீக்கிரம் வேலையை முடி ஊருக்கு போவோம். எனக்கு சென்னை தான் செட் ஆகும்." என்று சொல்லிவிட்டு போனும் கையுமாக வேனில் அமர்ந்து கொண்டாள். அவளது வாடிக்கை இது என்று ரவியும் அவளை கண்டுகொள்ளாது விட்டுவிட்டான். முதலில் டாய்லெட் கட்டுவதற்கு எக்ஸ்கவெட்டர்( ஜேசிபி என்பது அந்த இயந்திர நிறுவனத்தின் பெயர்) கொண்டு ஆழமான குழி தோண்டப்பட்டதும் ஒரு லாரி மூலமாக பயோ செப்டிக் டேங்க் கொண்டு வரப் பட்டது  இது வாழ்நாள் முழுவதும் நிறையவே நிறையாத கழிவு நீர் தொட்டி என்று அதன் உற்பத்தியாளர் சொல்லவும் முதலில் ஆச்சரியம் அடைந்தான். ஏனெனில் சென்னை பெருநகரில் ஒவ்வொரு வீட்டின் செப்டிக் டேங்க்கும் வருடத்திற்கு இருமுறையேனும் கழிவு நீர் ஊர்தி கொண்டு காலி செய்யப்படும். அதுவே அப்பார்ட்மெண்ட் என்றால் அதன் எண்ணிக்கை பொறுத்து, வாரம், ஏன் தினமும் கூட கழிவு நீர் அகற்றம் நடைபெறும். அப்படியிருக்க அவர்கள் குறிப்பிட்ட பயோ செப்டிக் டேங்க்கின் மீது ஆர்வம் ஏற்பட்டு...

சாரல் 10 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 10 ராகினி கோபத்துடன் எழில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்க, உள்ளே எழில் புகழோடு பேசுவது கேட்டது. "சாப்பிட்டு வீட்டுல இரு புகழ். நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன். வந்ததும் நாம கடையை விசாரிக்க போகலாம்" என்று கூற, "அக்கா நீ எங்க வெளில போற? வேண்டாம் யாரும் எதுவும் சொல்ல போறாங்க. அப்பறம் நீ தான் அழுதுகிட்டு இருப்ப." என்று அவளை தன் அருகில் அமர வைத்தான். "இல்ல புகழ் ஊருக்குள்ள போக மாட்டேன். இங்க தான் ஓடைக்கு போறேன். கொஞ்ச நேரம் தான் டா." என்று அவனது தலையைக் கலைத்தவள், "கிளம்புறேன்" என்று புடவை முந்தியை உதறி சொருகிக் கொண்டு வாசலுக்கு வந்து செருப்பை மாட்டினாள். திண்ணையில் ராகினி அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், "ராகினி வந்துட்டியா? வா போகலாம்." என்று அவள் கையைப் பற்றி அழைத்துச் செல்ல சின்னப் பிள்ளையின் குதூகலத்துடன் இளையவளும் இணைந்து கொண்டாள். சிறு ஓடை தான் என்றாலும் நீரில் சலசலப்பு, பாறைகளின் வழியே நீர் வழியும் அழகு என்று அவ்விடம் கொள்ளை அழகாக இருந்தது. "தினமும் இவ்வளவு தூரம் வருவீங்களா அக்கா?" என்று ராகினி கண்ணை வ...