இடுகைகள்

merke_un_saralmazhai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 77 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 77   "வாங்க, உள்ள கூட்டிட்டு வாங்க" என்று மகிழ்வாய் அழைத்தார் வைதீஸ்வரி.   அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை ரகுராம் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் மனைவியின் முகத்தை வாஞ்சையாக பார்த்துக் கொண்டிருக்க,   "நீங்க வந்தவங்களை கவனிக்காம இங்க என்ன பாத்துட்டு இருக்கீங்க?" என்று அவர் அதட்டவும் ரவியின் புதிய வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்களை வரவேற்று காலை உணவுக்கு அழைத்துச் சென்றார்.   வைதீஸ்வரி அத்தனை மகிழ்வாய் வீட்டிற்குள் முதலில் அழைத்தது வேறு யாரையும் அல்ல, ரவியும் எழிலும் புதிதாக வாங்கிய நாட்டு மாடும் அதன் சிறு கன்றையும் தான்.   புதுமனைக்கு பசுவை அழைப்பது மரபு என்பதாக அன்று பேச்சு வாக்கில் அவர் உரைத்திருக்க, ரவி உடனடியாக நல்ல விற்பனையாளரை சந்தித்து புது வீட்டிற்கு செல்லும் போது அவர்களுடைய பசுவையே அழைத்துச் செல்ல திட்டமிட்டு விட்டான்.   பிள்ளை இல்லாத அந்த அன்னையின் மனம் குளிர்ந்து போனது. "எப்படியும் கொஞ்ச நாள்ல வாங்க நினைச்சது தான் பெரியம்மா. இப்ப பாருங்க என்னோட கனவான தற்சார்பு வாழ்க்கை முறைக்கு முழுசா வந்தாச்சு.   ...

சாரல் 76 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 76   வாசலில் வந்து நின்ற சரோஜாவை கண்டு அனைவரும் புரியாது விழிக்க, முதலில் சுயவுணர்வுக்கு வந்தது வைதீஸ்வரி தான்.   "வாங்க சம்மந்தி அம்மா" என்று அழைத்து வரவேற்பாக முன்னே சென்றார்.   ராகினி யார் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்று நாசூக்கு பார்க்கும் ரகமல்ல என்பதால் அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.   புகழும் எழிலும் அமைதியாக நிற்க, ஶ்ரீதர் மருமகளைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.   வந்த சரோஜா நேராக மகனிடம் சென்று நின்றார்.   "கடனெல்லாம் கட்டிட்டன்னு அதோட என்னை மறந்துட்டல்ல புகழு? அம்மா என்ன செய்யிறேன்னு பார்க்க கூட வரலையே!" என்று கண்ணீரை முந்தானையில் துடைத்தார்.   புகழுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் வீட்டில் நல்ல விஷயங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இப்பொழுது இவரோடு சண்டையிட்டு நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.   அதனால் அவன் அமைதியாக நின்றான்.   "இரண்டு நாள் முன்ன வீட்டு ஓனர் வந்திருந்தாரு புகழு. அவருக்கு ஏதோ புது வீ...

சாரல் 74 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 74   எழிலும் ரவியும் ஊர் திரும்பி இருந்தனர். ரகுராமிடம் அமைதியாக நடந்தவைகளை விளக்கினான் ரவி.   அவர் கூட அமைதியாக அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டார். ஆனால் வைதீஸ்வரி மிகவும் உடைந்து போனார்.   "யாருக்கு என்ன பாவம் செய்தோம் மா நாம? தம்பிக்கு அறிவு இருந்தது திறமை இருந்தது நேர்மை இருந்தது, அதோட சேர்த்து தன் உழைப்பையும் போட்டு தானே பணம் சம்பாதிச்சாரு. யாரையும் அவர் ஏமாத்தலையே, ஏன் அந்த ஜனகராஜை கூட தம்பி ஏமாத்தலையே. அவன் பங்கு பணத்தை கொடுத்துட்டு தானே அவன் கையாடல் பண்றான்னு வெளில அனுப்பினார்? ஆனா மனித மனம் எவ்வளவு இழிவா இருக்கு பாரு எழில்! தனக்கு நேர்மையா இருந்தவனை ஏமாற்றின குற்றவுணர்வு இல்லாம தன் மனைவி முன்ன முகத்திரையை கிழிச்சிட்டான்னு தம்பியையும் மேகலாவையும் கொன்னு, ரவியை இப்படி ஏமாத்தி பணத்தை பிடுங்கி. அது போதாதுன்னு ராகினி வாழ்க்கையைக் கெடுக்க நினைச்சு. நல்ல வேளை அவனுக்கு ஒரு பொண்ணு இருக்க போய் ராகினியை நாசம் பண்ணுற எண்ணம் அவனுக்கு வரல போல. இல்லன்னா அந்த ஈனப் பய அதையும் செய்திருப்பான்" என்று கண்ணீரில் வாய் ஓயாமல் அழுது கரைந்தார்.   "நம்மளால ...

சாரல் 70 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 70   கணவனின் குரலில் இருந்த ஏக்கத்தைத் தாண்டிய ஆதரவைத் தேடும் விதமான உணர்வு எழிலிசையை சட்டென்று அசைத்துப் பார்த்து விட்டது.   இதுவே அவன் சாதரணமாக வினவி இருந்தால் அவள் சிரித்துக் கொண்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு நீங்க என்கிட்ட ஓடி வாங்க என்று கேலி செய்திருப்பாள். ஆனால் இந்த நொடி அவன் தேடுவது மனைவியை மட்டுமல்ல தோள் சாயத் தோழியும், அரவணைக்க அன்னையும், தாங்கிக் கொள்ள தந்தையும் என்று அவளது தேவை அவனுக்குத் தேவை என்று புரிந்து கொண்டாள்.   அமைதியாக, "போய் நல்லா தூங்கி எழுங்க. காலைல உங்களுக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்போ சோர்வு தான் உங்களை இப்படி பேச வைக்குது. மாமா அத்தை ரெண்டு பேரும் நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்பறம் இன்னிக்கு மதியம் ட்ரிப் இர்ரிகேஷன் செட் பண்ண வந்தாங்க. இன்னும் அந்த வேலை முடியல" என்று அவள் பேசிக்கொண்டே போக ஏனோ ரவியின் மனம் வருத்தம் கொண்டது.   தன் மனைவிக்கு ஏற்கனவே நிறைய பாரத்தை ஏற்றி வைத்து விட்டு இப்பொழுது அவளை இங்கே தேவையென்று தேடுவதும் அழைப்பதும் சற்றும் மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றியது. ஆனால் ...

சாரல் 69 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 69   பிரதீஷ் அழைத்து தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறியதும் ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை.   "என்ன கண்டுபிடிச்ச?" என்று அவன் ஆர்வமாக வினவ,   "போன்ல வேண்டாம் மாமா. நாம அதே இடத்துல மீட் பண்ணுவோம்" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட ரவிக்கு அங்கு சென்று அவன் வந்து சேரும் வரும் பரபரப்பாக இருந்தது.   பிரதீஷ் சற்று நேரம் சென்று தான் அங்கு வந்தான். கையில் சில பைல்களை அவன் வைத்திருக்க ரவி அவனிடம் ஆர்வமாக,   "என்னன்னு சொல்லு பிரதீஷ், எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு" என்று அவசரம் காட்டினான்.   "உங்களுக்கு ஏன் மாமா அந்த ஜனகராஜ் மேல சந்தேகம் வந்துச்சு?" என்று இவன் கேள்வி எழுப்ப,   "அதுக்கு தனிப்பட்ட காரணம் இல்ல. அவரோட ஒத்துவராம அப்பா அவரை விலக்கினதா அவர் சொல்லி கேட்டிருக்கேன். இத்தனை வருஷம் இல்லாம இப்ப திடீர்னு அவர் புது கம்பெனி, பிஸ்னஸ் எல்லாம் பார்க்கும் போது மனசுல ஒரு வித நெருடல். மத்தபடி அவர் மேல நான் சந்தேகப்பட சாலிடான எவிடென்ஸ் எதுவும் இல்ல" என்றான் தாடையை தேய்த்தபடி.   "இப்போ இருக்கு." என்று தன்...

சாரல் 68 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 68   ரவியின் பெரியப்பா ரகுராம் தன் மனைவி வைதீஸ்வரியுடன் கிளம்பி ரவியின் பண்ணைக்கு வந்து அதிகாலையில் இறங்கினார்.   ஏனோ முதல் நாள் காலை முதலே வைதீஸ்வரி ரவியைப் பார்க்க வேண்டும், ஏதோ தவறாக மனதுக்கு தோன்றுகிறது என்று கூறிக்கொண்டே இருக்க மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு ரவிக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை.   அவருக்குமே அதன் பின் மனம் அலைப்புற எழிலுக்கு அழைத்தார். அவள் அனைவரும் நலமென்று கூறினாலும் ஏனோ அவள் குரலில் சிறு தயக்கம் இருப்பது போல உணர்ந்தவர் தாங்களே நேரில் செல்வது தான் சரியாக இருக்குமென எண்ணி இரவோடு இரவாக கிளம்பி வந்துவிட்டார்.   இன்னும் பகலவனின் வெளிச்ச ரேகைகள் பாரில் பரவவில்லை. இருள் விலகலாமா வேண்டாமா என்று சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது.   காரை கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கி உள்ள வர முயன்றார்.   நிறைய புதிய செயல்பாடுகள் நடைபெற்றிருப்பது அவ்விருளில் கூட அவருக்குப் புலப்பட்டது.   கோழிகளின் கொக் கொக் சத்தமும் கொக்கரிக்கலாமா வேண்டாமா என்ற சேவல்களின் சந்தேக கீதமான 'கொக்கொரக்' என்று பாதியில் நிறுத்தி மீண...

சாரல் 67 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 67   தன் தந்தை ஊர் திரும்புவதாக தகவல் கிடைத்ததுமே அன்னையை அழைத்துப் பேசி விட்டான் பிரதீஷ்.   "அம்மா போலீஸ் வந்ததோ அப்பாவைக் கேட்டதோ, மாமா இன்ஸ்டாகிராம் பத்தி சொன்னது எதுவும் அப்பாவுக்கு தெரிய வேண்டாம். நான் அப்பாவுக்கு தெரியாம எல்லாத்தையும் விசாரிச்சு சரி பண்ணிடுறேன். நேத்து ஏதோ யோசனையில பேசிட்டேன். நீ எதுவும் அப்பா கிட்ட சொல்லிடாத" என்று அன்னையை சமாளித்தான்.   அந்த அப்பாவிப் பெண்மணிக்கோ எங்கே மகன் தன் தந்தையை தவறாக நினைத்து ஏதும் செய்து விடுவானோ என்று முதல் நாளிலிருந்து மனதில் இருந்த பயம் சற்று மறைந்தது.   "ரொம்ப நல்லது டா தம்பி. நான் ரொம்ப பயந்துட்டேன்" என்று கூறிவிட்டு இனி மகன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதியுற்றார்.   பிரதீஷ் மனதில் வேறு இருந்ததை அவர் அறியவில்லை. ஏனெனில் அவன் தன் தந்தையின் மறுபக்கத்தையும், ரவி ஏன் தன் அத்தை மாமாவின் மறைவைப் பற்றி மறுபடியும் விசாரிக்க வந்திருக்கிறான், அதற்கும் தன் தந்தைக்கும் என்ன தொடர்பு என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.   ரவியை அழைத்துப் பேச முடிவு செய்திருப்...