இடுகைகள்

merke-un- saralmazhai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 12 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
    சாரல் 12   மறுநாள் விடியல் அனைவருக்கும் இயல்பாக தத்தமது வேலைகளுடன் கழிய புகழ் மட்டும் அதிசயமாக வீட்டில் இருந்தான் .   அவனை பார்த்தபடியே சாமிக்கு பூ வைத்து பூஜித்த ஶ்ரீதரன் , வெளியில் இருக்கும் விளக்குப் பிறையில் பணத்தை வைத்துவிட்டு ,   " செல்லம் , உன் தம்பிக்கு விளக்கு மாடத்துல காசு வச்சிருக்கேன் . எடுத்துட்டு கிளம்ப சொல்லு .” என்று உரக்க கூறினார் .   எழில் அவ்விடம் இல்லாததால் அவருக்கு பதில் வராமல் போக , புகழ் எழுந்து தந்தையிடம் வந்தான் .   " அப்பா , நான் தப்பு பண்ணினேன் தான் . ஆனா இப்போ மாறிட்டேன் பா . உள்ளூர்ல வேலை கிடைக்க மாட்டேங்குது பா . நேத்து அக்கா கூட கடை வைக்க இடம் பார்க்க போன இடத்தில அவமானம் . என் நண்பன் கிட்ட வேலைக்கு கேட்டதுக்கு மானங்கெட்டு போச்சு பா . நான் வெளியூர் போய் ஒழுங்கா படிச்சு சம்பாதிச்சு கடனை அடைக்கிறேன் பா . என்னை நம்பி அனுப்புங்க பா " என்று நா தழுதழுக்கக் கூறினான் .   அவனை ஆழ்ந்து நோக்கிய ஶ்ரீதரன் , " நீ சொ...

சாரல் 11 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 11   வீடு நோக்கிய எழில் மற்றும் புகழின் பயணம் அமைதியாகவே கழிந்தது.   எழிலை வீட்டு வாயிலில் இறக்கி விட்ட புகழ், "அக்கா அந்த கடை விஷயத்தை மறந்திடு. நான் உள்ளூர்ல வேலை கிடைக்குமான்னு பாக்கறேன்." என்று சொன்னதும்,   "நீ உனக்கு சரின்னு படுறத செய். நானும் அப்படித் தான். ஏதாவது ஒன்னு சரியா அமைஞ்சாலும் நம்ம வீடு தானே சந்தோஷமா இருக்கப் போகுது?" என்று அவன் தலையை ஆதுரமாக தடவினாள்.   "தர்மா அண்ணன் பேசினது எதையும் மனசுல போட்டு வருத்தப்படாத. எல்லாம் போக போக புரிஞ்சுக்குவாங்க." என்றான் பெரிய மனித தோரணையுடன்.   "நீ எப்பவும் இப்படி ஒரு புகழு. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?" என்று அவன் கன்னத்தில் கை வைத்து வருடினாள்.   "நீ இப்படி செய்யும் போது பள்ளிக்கூட பையன் போல தோணுது கா எனக்கு." என்று அவனும் தான் தோளோடு அவளது கையை கன்னத்துடன் அழுத்தினான்.   "ரொம்ப நடந்து போச்சுல்ல டா. எல்லார் மனசும் ரணமா இருந்திருக்கு. நமக்கு நாமளே ஆறுதல் சொல்லிக்கல பாரு." என்று தட்டிக் கொடுத்து அவனை சென்று வரும்படி தலையசைத்தாள்.   புகழுக்கு அந...