இடுகைகள்

மேற்கே உன் சாரல்மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 73 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 73 பணம் கடனாக ஜனகராஜ் கேட்டிருந்தால் கண்டிப்பாக உதவி செய்திருப்பார் பரசுராம். ஆனால் தன்னுடைய பங்குதாரர் என்று கூறி ஒரு நிறுவனத்தில் பணம் பெற்றுச் சென்றது அவருக்கு மிகப் பெரிய அவமானமாகவும் அவமரியாதையாகவும் இருந்தது.  ஏற்கனவே பல முறை ஜனகராஜை காஸ்மோ கிளப்பில் பார்த்திருக்கிறார். அன்றும் தனது கோபத்தை அவரிடம் வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த இடம் அதுவாகவே இருக்க, இவர் சென்ற போது ஜனகராஜ் மாவட்ட டி.எஸ்.பியுடன் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். ஜனாவிடம் பேசிவிட்டு அவர் சரிவராவிட்டால் போலீஸில் புகார் கூறும் எண்ணத்தில் இருந்தவர் இங்கே அவர் யாருடன் விளையாடுகிறார் என்று அறிந்து அது சரிவராது என்று எண்ணி கிளம்பி விட்டார். ஆனால் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் ஏற்கனவே தனது நிறுவனத்தில் கையாடல் செய்ததற்கான சாட்சியங்களை காட்டிவிட்டு, இப்பொழுது பொய்யுரைத்து மோசடி செய்ததையும் நிரூபித்து, போலீஸில் கூறினால் செல்வாக்கை பயன்படுத்தலாம்.  ஆனால் நேரடியாக சோஷியல் மீடியாவில் கூறிவிட்டால் ஜனகராஜின் மரியாதை கெடுவதோடு அவர்கள் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்ற ஒரே காரணத்தி...

சாரல் 72 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 72 தன் கைவளைவில் இருந்த மனைவியைக் கண்டு ரவியின் மனம் நிறைந்து இருந்தது. அன்று போனில் அவன் பேசி வைத்ததும் கடைசி பஸ்சில் ஏறி காலை விடியும்போது சென்னை வந்து விட்டாள். அதிகாலை அவளது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் அரைத்தூக்கத்தில் "என்ன இசை?" என்று கேட்டவனிடம் "கொஞ்சம் வேன் கதவைத் திறங்க சன்ஷைன்" என்றாள். பரபரவென்று எழுந்து கேம்பர் வேனின் கதவைத் திறக்க மலர்ந்த முகமாக கையில் பையுடன் நின்றிருந்தாள். அவளது வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ரவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான். அவளை அருகே இழுத்து மார்போடு அணைத்து நின்றபோது நேற்றிருந்த நிராதரவான மனநிலை காற்றில் மறைந்து யானை பலம் கூடியது போல உணர்ந்தான் ரவி. அவன் இயல்புக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. "எப்படி இசை?" என்று அவன் வியந்து கேட்க,  "நேத்து உங்களுக்கு பக்கத்துல நான் இருக்கணும்ன்னு தோனி இருக்கு. அதான் உங்களை அறியாம அது வெளில வந்தது. நானும் வந்துட்டேன்." என்று சின்னதாக சொல்லி முடித்தாள். அதன் பின் தான் பிரதீஷ் அவனிடம் காட்டிய கோப்புகள் பற்றி அவளுக்கு விளக்க, "எனக்கென்னவோ உங்க ம...

சாரல் 54 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 54   புகழும் ராகினியும் ரகுராமுடன் கிளம்பிச் சென்று விட, ரவி யோசனை முகமாக அவ்விடத்தில் ஏற்கனவே ஆரம்பித்திருந்த வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.   காலையில் வீட்டு வேலைகளை முடித்த எழில் அமைதியாக ரவியின் அருகில் வந்து நிற்க, தருவிக்கப்பட்ட ஒரு புன்னகையை அளித்தவன்,   "சாப்பிட்டியா இசை?" என்று அன்புடன் வினவினான்.   "நான் சாப்பிடுறது எல்லாம் இருக்கட்டும் சன்ஷைன், நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க மனசை எது போட்டு இப்படி அறிச்சுக்கிட்டு இருக்கு? என்கிட்ட சொல்லுங்க." என்று அவனது வலது கரத்தைப் பற்றி தன் கைகளுக்கு இடையில் வைத்து அதனை கன்னத்தோடு வைத்தாள்.   "ஒன்னும் இல்ல இசை" என்று சமாளிப்பாக ரவீந்தர் உரைக்க,   "ஏன் பா நான் உங்க மனசுல உள்ளதை புரிஞ்சுக்க மாட்டேன்னு உங்களுக்கு தோனுதா? அப்படியே இருந்தாலும் கண்டிப்பா ஆறுதலா இருப்பேன், உங்க மனபாரம் இறங்கும்ல?" என்று மேலும் குரலில் மென்மையைக் கூட்டி வினவினாள்.   ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்ட ரவி, "நான் இங்க இடம் வாங்கிட்டு வந்தது ஒரு எண்ணத்துல, அது நடக்குமான்ணு இப்போ தெரியல...

சாரல் 53 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 53   ரவி வீட்டில் நுழையும் போது உணவு மேசையில் ரகுராமும் வைதீஸ்வரியும் அமர்ந்து காலை உணவை உட்கொண்டு இருக்க,   அவர்கள் அருகில் நின்று பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் எழில்.   "வாசல்ல கோலம், ருசியா சாப்பாடு, பக்கத்துல இருந்து பரிமாறும் பக்குவம், நீ ரொம்ப நல்ல பொண்ணு மா" என்று வைதீஸ்வரி எழிலை புகழ,   "எனக்கு இதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது அத்தை. அதான் செய்றேன். இதை செய்யாத பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்க தான். இதெல்லாம் தெரிஞ்ச நான் உயர்ந்தவளும் இல்ல, தெரியாத பெண்கள் குறைஞ்சவங்களும் இல்ல." என்று சிரித்த முகமாக கூறினாள் எழில்.   "சூப்பர் அண்ணி. நல்லா சொல்லு. இந்த புகழ் காலைலயே வந்து நாளைக்கு நீ தான் சமைக்கணும். இன்னிக்கு என் அக்கா கொடுத்தது சரி, இனியும் அக்காவை எதிர்பார்க்க முடியாதுன்னு காதுல இரத்தம் வர பேசுறான்." என்று குற்றம் கூறிக்கொண்டு அமர்ந்தாள்.   எழில் அவளுக்கும் ரவிக்கும் தட்டை எடுத்து வைக்க,   ரவி எதுவும் கூறாமல் எழில் கொடுத்த உணவை உண்டான்.   ராகினி சாப்பிட்டாலும் வாய் என்னவோ என்னால் வேலை செய்ய முடியா...

சாரல் 52 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 52   பொழுது புலர்ந்தது தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தார் சரோஜா. இரவெல்லாம் அவருக்கு சரியான உறக்கம் இல்லாமல் மனம் எப்படி ரவியை தன் காலில் விழ வைப்பது என்று எண்ணி எண்ணிக் களைத்துப் போய் தூங்கும் போது விண்மீன்கள் விடைபெறும் நேரமாகியது.   ஶ்ரீதரன் எழுந்து எப்பொழுதும் போல தன்னுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.   மகளை மறுவீடு அழைக்க வேண்டும், மருமகளை மறுவீடு அனுப்ப வேண்டும். இதைப் பற்றி ரகுராம் ஒன்றும் கூறி இருக்கவில்லை. ஒன்றாக வைத்தே விருந்து சமைத்துக் கொடுக்க நினைத்தார் அவர்.   அவர்கள் நால்வரின் இடையில் இருக்கும் அன்பை மாமன் மச்சான் செய்முறை, நாத்தனார்கள் சண்டை என்று எதுவும் பிரித்து விடக் கூடாதென்று எண்ணினார்.   நிதானமாக எழுந்த சரோஜா வெளியே வர வாசல் வறண்டு போய் கிடந்தது. யோசனையாக சமையலறை வர, அங்கே இரண்டு நாட்களாக சமைத்த தடமே இல்லை.   நேற்றோடு கல்யாண கலாட்டாக்கள் முடிந்ததே. இன்று பழையபடி தினசரி வாழ்வுக்கு திரும்பியாக வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். அப்பொழுது தான் இந்த மாதத்தின் வட்டிப் பணத்தைக் கட்ட முடியும். யாரோ...

சாரல் 51 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 51   ரவி எழில் அருகில் அமர்ந்து தன் கல்லூரி கதைகள் பேசி சிரிக்க, எழிலும் தன் அனுபவங்களையும் அங்கே நிகழ்ந்த நகைச்சுவைகளையும் பகிர்ந்து கொண்டாள்.   பல இடங்களில் இருவரின் ரசனை, எண்ணம், செயல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க, ஆச்சரியமாக அதனை எண்ணிக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்த வண்ணம் பேச்சை வளர்த்தனர்.   நடுநிசி தாண்டியும் ரவி பேசிக்கொண்டிருக்க எழிலின் கண்கள் சொருகத் துவங்கியது.   "இசை, போதும் அப்பறமா எல்லாத்தையும் பேசுவோம். வந்து தூங்கு" என்று கட்டிலில் தலையணையை அவளுக்கு வாகாக போட்டுக் கொடுத்தான்.   அவளோ அவனது செயலில் வியந்து, "உங்களுக்கு தூக்கம் வரலையா?" என்று கேட்க,   "ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா ஃபீல் பண்ணுறேன் இசை. அதை சொல்ல என்கிட்ட சரியான வார்த்தைகள் கூட இல்ல. கண்டிப்பா கொஞ்ச நேரம் தூங்கினாலும் ஆழ்ந்து தூங்குவேன்னு நம்பிக்கை இருக்கு. நீ படு. எனக்கு பறக்கற ஃபீல். தூக்கம் இப்ப வரல" என்று அவளை படுக்க வைத்து கெட்டியான போர்வையை போர்த்தி விட்டான்.   அவள் அவனை அருகே அமர்ந்து கொள்ளச் சொல்லி அவனது கால்களுக்கு போர...

சாரல் 50 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 50 ராகினி புகழை நோக்கி பேசலாமா? என்று கண்ணால் கேட்க,  ‘பேசு’ என்று தலையசைத்தான் புகழ். "என்ன மாமியாரே! போஸ்டிங் கிடச்சதும் பொங்கிட்டிங்க போல? யூடியூப் முழுக்க உங்க பேச்சு தான்", என்று நக்கல் தொனியில் கேட்டாள் ராகினி. சரோஜா மகனை முறைத்தவாறு, "என்ன புகழ் இதெல்லாம்?" என்று கேட்க, அவனோ கைபேசியை எடுத்து யூடியூபை காட்டி "என்னம்மா இதெல்லாம்?" என்று அவரைப்போலவே வினவினான். "உங்க விஷயமெல்லாம் ஊரறிஞ்ச ரகசியம். யார் சொன்னாங்களோ?" என்று சம்மந்தம் இல்லாதவர் போல பேசிய அன்னையை எரிச்சலாக நோக்கினான் புகழ். ராகினி ஏதோ பேச வாயெடுக்க வேண்டாம் என்று அழுத்தமாக அவள் கையை பற்றியவன் அங்கிருந்து விலகி நடந்தான். சரோஜாவுக்கு தெரியவில்லை அவன் அங்கிருந்து விலகவில்லை, மனதளவில் அன்னையை விட்டு விலகிச் செல்கிறான் என்று. ஊரார் புகழ ரவி எழில் தம்பதி இன்முகமாக அவர்களை கவனித்தவண்ணம் இருந்தனர். "உங்களுக்கும் இன்னிக்கு தானே கல்யாணம் ஆச்சு, போய் மேடையில நில்லுங்க" என்று ஒருவர் பரிவாகக் கூற, "ரெண்டு வீட்லயும் மூத்த பிள்ளைங்க நாங்க, அடுத்த பிள்ளைகளுக்கும் இன்னிக்கு கல...

சாரல் 49 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 49 சரோஜாவின் வேலையால் யூடியூப் முழுவதும் இரவியின் திருமணம் வீடியோவுக்கு பதிலாக வதந்தி வீடியோ தான் பரவிக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் டிரெண்டிங் வீடியோக்களாக அவை மாற அவனுக்கு தோழர்களாக இருக்கும் யூடியூப் சேனல்கள் ரவிக்கு தகவல் கொடுத்தனர். திருமணம் முடிந்த மகிழ்வில் இருந்த ரவிக்கு இந்த செய்தி உவப்பானதாக இல்லையென்றாலும் அதே நேரம் மனதை பாதிக்கும் அளவுக்கு உளைச்சலானதாகவும் இல்லை. அவன் எழிலின் காதருகில் சென்று நிலையை அடுத்தவர் அறியாவண்ணம் நடந்தவைகளை விவரித்தான். அதிலும் ஒரு சேனலில் சொன்னது பெண்ணின் அன்னை என்றே வெளியிட்டிருக்க, எழில் தீப்பிழம்பானாள். அவள் சரோஜாவை முறைப்பதைக் கண்டு ரவி அவளிடம், "அவங்களை முறைச்சு என்ன ஆகப் போகுது இசை. இது புகழ் செய்த செயலுக்கான எதிரொலி. நாம தான் இதை சமயோஜிதமா ஹேண்டில் பண்ணனும்." என்று சொன்னவன் அவளையும் புகழ், ராகினி இருவரையும் அழைத்துக் கொண்டு தனியே சென்றான். சரோஜா அவன் செயல்களை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருக்க, அவரை நோக்கி மந்தகாச புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு கடைசியாக அவன் நடக்க சரோஜாவின் உள்ளம் தடதடத்தது. இதுவரை அவன் நினைத்தது போல தான் ...

சாரல் 48 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 48   மலைகளுக்கு உரித்தான மந்தமான காலைப் பொழுது. திருமண பரபரப்பு என்பது மனிதர்களுக்கு தானே! சூரியனும், பனிக் காற்றும், மூடு பனியும் திருமணத்திற்காக விடுமுறை விட்டுக் கொள்ளுமா என்ன!   அந்த இன்பமான காலை வேளையில் அரக்கு நிறப் புடவையில் எழிலும் ராகினியும் தயாராக இருந்தனர். மணமேடையில் இரு பந்தல்கள் அமைக்கப்பட்டு அதில் வெள்ளை வேட்டி சட்டையில் ஐயர் சொல்லும் மந்திரங்களை திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தனர் ரவியும் புகழும்.   சரோஜா அகலக்கறை பட்டுச் சேலை சரசரக்க, வாயிலில் நின்று வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.   ஶ்ரீதரன் மகனும் மருமகனும் பார்த்து வைத்திருந்த வேலைகளை அவர்கள் கூறியது போலவே அந்த நேரத்துக்கு ஏவி சிறப்பாக முடித்துக் கொண்டிருந்தார்.   ரகுராம் வந்திருந்த சொந்தங்களை உள்ளே அழைத்து அமர வைக்க, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு முகம் மாறாமல் பதில் தர சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் வைதீஸ்வரி.   முகூர்த்த நேரம் நெருங்க, பெண்கள் இருவரையும் அழைத்து மஞ்சள் சேலை வைத்துக் கொடுத்து உடுத்தி வருமாறு ஐயர் அனுப்பினார்.   மணமகன்களு...