இடுகைகள்

மேற்கே உன் சாரல்மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 80 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 80   எழிலிசையும் வைதீஸ்வரியும் ராகினியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினர். அவள் பழைய ராகினியாக இருந்திருந்திருந்தால் சுகமாக படுத்துறங்கி அதனை ரசித்து மகிழ்ந்திருப்பாள்.   ஆனால் இன்றைய ராகினி எறும்புடன் போட்டி போடும் அளவுக்கு சுறுசுறுப்பு நிறைந்தவளாக மாறி இருக்க, அவர்களின் அன்பைக் கனிவோடு அவ்வப்போது மறுத்து தன் தாய்மையின் சுகவேதனைகளைத் தாங்கிக் கொண்டு புகழின் கடையை முழுவதுமாக அவளே கவனித்துக் கொண்டிருந்தாள்.   புகழ் புதிதாக ஆரம்பித்த தொழிலில் கவனம் செலுத்த தன்னால் முயன்றவரை அவனுக்கு உதவினாள்.   எழில் அன்று பெரியவர்களை அழைத்து ராகினிக்கு வளைகாப்பு நடத்த நாள் பார்க்கக் கூறினாள்.   ஶ்ரீதர் தான் செலவுகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல,   "அப்பா நம்ம வீட்டு விசேஷம் நீங்க நடத்தி வைக்கணும்ன்னு மட்டும் தான் ஆசைப்படுறோம். செலவெல்லாம் இன்னார் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. இப்பவே நாம எல்லாரும் சேர்ந்து தான் பண்ணையில உழைக்கிறோம். நாளைக்கு அவர் கிட்ட சொல்லி சம்பளம் போட சொல்லவா?" என்றாள் உரிமைக் கோபத்துடன்.   "அப்படி இல்லம்மா....

சாரல் 79 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 79   புதிய வீட்டின் முதல் நாள் இரவு. புகழ் ராகினியை தான் மேல் சாய்த்துக் கொண்டு அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.   இதற்கு முன் அவர்கள் இருக்குவருக்கும் அதிக நெருக்கம் இருந்ததில்லை. காதல் என்ற எண்ணம் வளர்ந்ததில்லை. திருமணம் முடிந்து விட்டது என்பதால் பரஸ்பர அன்போடு இருந்தனர். ஆனால் தாய்மை அடைந்த பின் தான் புகழ் மேல் அவளுக்கு தனி பிரியம் எழுந்தது.   தன் அண்ணன் பல கனவுகளுடன் இருந்தவன் என்று அவளறிவாள். ஆனால் புகழ் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் தன்னைப் போலவே பொறுப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவன் தானே! ஆனால் இன்று தன் அண்ணனுடன் இணைந்து புது புது விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பது, செலவுகளை கட்டுக்குள் வைப்பது, ஊராரின் மரியாதையை ஈட்டிக் கொண்டது என்று அவனது பட்டியல் நீண்டு கொண்டே போனது.   அதிலும் அவள் என்ன சொன்னாலும் ‘சரி ராணி’ என்ற அவனின் பதில் அவளை குளுமையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது என்பதே உண்மை. அவள் மீது தவறே இருந்தாலும், அவளே சண்டை போட்டாலும் பொறுத்து, நிதானமாக அந்த தவறை சுட்டிக் காட்டுவதும், எழிலிடம் சென்று குறையாகக் கூறாம...

சாரல் 78 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 78   புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்கள் எல்லாம் ரவி ஏற்பாடு செய்த இயற்கை உணவை உண்டுவிட்டு அனைத்தையும் பாராட்டிவிட்டே கிளம்பினர்.   மாலையில் ரகுராம், வைதீஸ்வரி, ஶ்ரீதர், புகழ்,ராகினி, ரவீந்தர், எழிலிசை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.   இருந்த இரண்டு கன்டெய்னர் வீடுகளில் பெரியவர்கள் தாங்கள் தங்கிக் கொள்வதாக கூறிவிட, எவ்வளவோ சிறியவர்கள் கேட்டுக்கொண்டும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.   கீழே இருந்த அறைகளில் ஆளுக்கு ஒன்றாக இளையவர்கள் சென்று இளைப்பாற முடிவு செய்தனர்.   புகழ் ராகினியை கவனமாக அழைத்துச் செல்ல, அதனை நிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.   "உங்க தங்கச்சி எப்படி மாறி போயிட்டா பார்த்திங்களா?  நைட்டு டின்னர் அவ தான் ரெடி பண்ணுவாளாம் நான் சமையல் பக்கம் வரக் கூடாதாம்." என்று எழில் அவன் தோளில் சாய்ந்து சிரித்தாள்.   "புகழுக்கு அவ மேல எவ்வளவு அன்பு பார்த்தியா இசை? ராணி ராணின்னு ராணி மாதிரியே அவளை பார்த்துக்கறான். நான் தான் உன்னை சரியா கவனிக்கிறது இல்ல." என்று வருத்தமாக கூறினான் ரவி.   "என...

சாரல் 73 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 73 பணம் கடனாக ஜனகராஜ் கேட்டிருந்தால் கண்டிப்பாக உதவி செய்திருப்பார் பரசுராம். ஆனால் தன்னுடைய பங்குதாரர் என்று கூறி ஒரு நிறுவனத்தில் பணம் பெற்றுச் சென்றது அவருக்கு மிகப் பெரிய அவமானமாகவும் அவமரியாதையாகவும் இருந்தது.  ஏற்கனவே பல முறை ஜனகராஜை காஸ்மோ கிளப்பில் பார்த்திருக்கிறார். அன்றும் தனது கோபத்தை அவரிடம் வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த இடம் அதுவாகவே இருக்க, இவர் சென்ற போது ஜனகராஜ் மாவட்ட டி.எஸ்.பியுடன் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். ஜனாவிடம் பேசிவிட்டு அவர் சரிவராவிட்டால் போலீஸில் புகார் கூறும் எண்ணத்தில் இருந்தவர் இங்கே அவர் யாருடன் விளையாடுகிறார் என்று அறிந்து அது சரிவராது என்று எண்ணி கிளம்பி விட்டார். ஆனால் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் ஏற்கனவே தனது நிறுவனத்தில் கையாடல் செய்ததற்கான சாட்சியங்களை காட்டிவிட்டு, இப்பொழுது பொய்யுரைத்து மோசடி செய்ததையும் நிரூபித்து, போலீஸில் கூறினால் செல்வாக்கை பயன்படுத்தலாம்.  ஆனால் நேரடியாக சோஷியல் மீடியாவில் கூறிவிட்டால் ஜனகராஜின் மரியாதை கெடுவதோடு அவர்கள் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்ற ஒரே காரணத்தி...

சாரல் 72 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 72 தன் கைவளைவில் இருந்த மனைவியைக் கண்டு ரவியின் மனம் நிறைந்து இருந்தது. அன்று போனில் அவன் பேசி வைத்ததும் கடைசி பஸ்சில் ஏறி காலை விடியும்போது சென்னை வந்து விட்டாள். அதிகாலை அவளது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் அரைத்தூக்கத்தில் "என்ன இசை?" என்று கேட்டவனிடம் "கொஞ்சம் வேன் கதவைத் திறங்க சன்ஷைன்" என்றாள். பரபரவென்று எழுந்து கேம்பர் வேனின் கதவைத் திறக்க மலர்ந்த முகமாக கையில் பையுடன் நின்றிருந்தாள். அவளது வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ரவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான். அவளை அருகே இழுத்து மார்போடு அணைத்து நின்றபோது நேற்றிருந்த நிராதரவான மனநிலை காற்றில் மறைந்து யானை பலம் கூடியது போல உணர்ந்தான் ரவி. அவன் இயல்புக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. "எப்படி இசை?" என்று அவன் வியந்து கேட்க,  "நேத்து உங்களுக்கு பக்கத்துல நான் இருக்கணும்ன்னு தோனி இருக்கு. அதான் உங்களை அறியாம அது வெளில வந்தது. நானும் வந்துட்டேன்." என்று சின்னதாக சொல்லி முடித்தாள். அதன் பின் தான் பிரதீஷ் அவனிடம் காட்டிய கோப்புகள் பற்றி அவளுக்கு விளக்க, "எனக்கென்னவோ உங்க ம...

சாரல் 54 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 54   புகழும் ராகினியும் ரகுராமுடன் கிளம்பிச் சென்று விட, ரவி யோசனை முகமாக அவ்விடத்தில் ஏற்கனவே ஆரம்பித்திருந்த வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான்.   காலையில் வீட்டு வேலைகளை முடித்த எழில் அமைதியாக ரவியின் அருகில் வந்து நிற்க, தருவிக்கப்பட்ட ஒரு புன்னகையை அளித்தவன்,   "சாப்பிட்டியா இசை?" என்று அன்புடன் வினவினான்.   "நான் சாப்பிடுறது எல்லாம் இருக்கட்டும் சன்ஷைன், நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க மனசை எது போட்டு இப்படி அறிச்சுக்கிட்டு இருக்கு? என்கிட்ட சொல்லுங்க." என்று அவனது வலது கரத்தைப் பற்றி தன் கைகளுக்கு இடையில் வைத்து அதனை கன்னத்தோடு வைத்தாள்.   "ஒன்னும் இல்ல இசை" என்று சமாளிப்பாக ரவீந்தர் உரைக்க,   "ஏன் பா நான் உங்க மனசுல உள்ளதை புரிஞ்சுக்க மாட்டேன்னு உங்களுக்கு தோனுதா? அப்படியே இருந்தாலும் கண்டிப்பா ஆறுதலா இருப்பேன், உங்க மனபாரம் இறங்கும்ல?" என்று மேலும் குரலில் மென்மையைக் கூட்டி வினவினாள்.   ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்ட ரவி, "நான் இங்க இடம் வாங்கிட்டு வந்தது ஒரு எண்ணத்துல, அது நடக்குமான்ணு இப்போ தெரியல...

சாரல் 53 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 53   ரவி வீட்டில் நுழையும் போது உணவு மேசையில் ரகுராமும் வைதீஸ்வரியும் அமர்ந்து காலை உணவை உட்கொண்டு இருக்க,   அவர்கள் அருகில் நின்று பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் எழில்.   "வாசல்ல கோலம், ருசியா சாப்பாடு, பக்கத்துல இருந்து பரிமாறும் பக்குவம், நீ ரொம்ப நல்ல பொண்ணு மா" என்று வைதீஸ்வரி எழிலை புகழ,   "எனக்கு இதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது அத்தை. அதான் செய்றேன். இதை செய்யாத பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்க தான். இதெல்லாம் தெரிஞ்ச நான் உயர்ந்தவளும் இல்ல, தெரியாத பெண்கள் குறைஞ்சவங்களும் இல்ல." என்று சிரித்த முகமாக கூறினாள் எழில்.   "சூப்பர் அண்ணி. நல்லா சொல்லு. இந்த புகழ் காலைலயே வந்து நாளைக்கு நீ தான் சமைக்கணும். இன்னிக்கு என் அக்கா கொடுத்தது சரி, இனியும் அக்காவை எதிர்பார்க்க முடியாதுன்னு காதுல இரத்தம் வர பேசுறான்." என்று குற்றம் கூறிக்கொண்டு அமர்ந்தாள்.   எழில் அவளுக்கும் ரவிக்கும் தட்டை எடுத்து வைக்க,   ரவி எதுவும் கூறாமல் எழில் கொடுத்த உணவை உண்டான்.   ராகினி சாப்பிட்டாலும் வாய் என்னவோ என்னால் வேலை செய்ய முடியா...