இடுகைகள்

காதல் கதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 21 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 21   ராகினி கடுங்கோபத்துடன் குளிரடிப்பதை உணர முடியாத அளவுக்கு உள்ளே வெம்மை ஏற நடந்து கொண்டிருந்தாள் .   தன் அண்ணன் ஏதோ மனமாற்றத்திற்காக சென்னையில் இருந்து சில நாட்கள் இங்கே தங்க வந்திருக்கிறான் என்று அவள் நம்பிக் கொண்டு அமர்ந்திருக்க , அவனோ தன்னுடைய தனிமை பயணத்துக்கு தாய் தந்தையின் தொழில் தடையாக வந்து விடுமோ என்று எண்ணி அவர்களையே காரணம் காட்டி இங்கே வந்து முழுவதுமாக இடம்பெயர்ந்து இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை .   அதிலும் அவனுடைய முடிவை திணிப்பதற்காக தாய் தந்தை விபத்தில் இறந்ததை தற்கொலை என்று பேசும் அவனது கிறுக்குத்தனத்தை ஏற்கவே முடியாது என்று எண்ணியவள் இனி அவனுடன் இங்கே தங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் .   சென்னை வீட்டின் சாவி எப்படியும் காளியம்மாளிடம் தான் இருக்கும் . இனி எதுவாகிலும் அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இடத்தில் இருந்து மெயின் ரோடு செல்லும் சாலையில் வந்து நின்றாள் .   இது வரை வீரமாக...

சாரல் 20 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 20   " இன்னும் ஏன் இங்கேயே சுத்திகிட்டு இருக்க ? போ என் கண்ணுல படாம போய் தொலை ." என்று எதிரில் நின்ற மகன் மேல் மொத்த கோபத்தையும் கொட்டி விட்டு திண்ணை ஓரத்தில் சாய்ந்து அமர்ந்தார் ஶ்ரீதரன் .   இவன் ஒருவனை மையமாக வைத்து சரோஜா செய்த செயல்கள் தான் எத்தனை ? நல்லது செய்கிறாள் என்று நம்பி அவளுக்கு துணை போய் , இன்று அவமானப்பட்டு நிற்கும் போது விழித்துக் கிடக்கும் புத்தி அன்று அவள் ஆடியபோது ஏன் உறங்கிக் கொண்டிருந்தது என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு அப்படியே சரிந்து படுத்தார் .   புகழ் அவர் அருகில் வந்து மன்னிப்பு வேண்டியதோ , அவர் அவனை கவனிக்காமல் இருந்ததால் அழுதபடி வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனதோ அவர் அறியவில்லை .   இந்த வீட்டில் நிலவரம் இப்படி இருக்க , பெரியப்பா பெரியம்மா வந்ததும் அவர்களை உபசரித்து விட்டு அருகில் அமர்ந்தான் ரவீந்தர் .   " இந்த இடம் போதுமா ரவி ?" என்று மனம் பொறுக்காமல் வினவினார் வைதீஸ்வரி .   " பெரியம்மா வீடு சின...