சாரல் 26 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 26 ராகினியை கீழே இறங்கச் சொல்லி அழைத்து வந்த காவலர் கூற, கோபத்துடன் இறங்கியவள் வேகமாக சென்று நின்றது ரவியிடம் தான். "என்ன உன் திட்டம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு போலீஸ் வச்சு மிரட்டுறியா?" என்று எடுத்தவுடன் சண்டைக்கு நிற்க, அங்கிருந்த யாருக்கும் விஷயம் புரியவில்லை, ரவி உட்பட. இவர்களை அழைத்து வந்தது குறித்து வி.ஏ.ஒவுக்கு தகவல் கொடுக்க, ஊர் பிரமுகர்கள் வேகமாக அவ்விடம் அடைந்தனர். "என்ன பேசுற ராகினி? நேத்து இந்த நேரம் காணாம போன நீ. உன்னை காணலன்னு நாங்க எல்லாரும் துடிச்சு போய் உட்கார்ந்து இருக்கோம். நீ என்னடான்னா வந்ததும் ஏதேதோ பேசுற?" என்று வைதீஸ்வரி அவள் தோளைத் திருப்பிக் கோபமாக வினவ, "நீங்க சும்மா இருங்க பெரியம்மா. உங்களை பத்தி எல்லாம் எங்கம்மா சொல்லி இருக்காங்க. காரணம் கிடைச்சதும் இவனை பாக்கெட்ல போட்டுகிட்ட மாதிரி என்னையும் போட்டுக்க டிரை பண்ணுறீங்க. இதுல என் அப்பா அம்மா சாவை தற்கொலைன்னு ஃப்ரேம் பண்ணுறீங்களா?" என்றதும், தன்னை தவறாக பேசியதைக் கூட உணராதவர், "உன் அப்பா அம்மா பத்தி உனக்கு யாரு சொன்னாங்க டா...