சாரல் 76 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 76 வாசலில் வந்து நின்ற சரோஜாவை கண்டு அனைவரும் புரியாது விழிக்க, முதலில் சுயவுணர்வுக்கு வந்தது வைதீஸ்வரி தான். "வாங்க சம்மந்தி அம்மா" என்று அழைத்து வரவேற்பாக முன்னே சென்றார். ராகினி யார் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்று நாசூக்கு பார்க்கும் ரகமல்ல என்பதால் அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள். புகழும் எழிலும் அமைதியாக நிற்க, ஶ்ரீதர் மருமகளைத் தொடர்ந்து உள்ளே சென்றார். வந்த சரோஜா நேராக மகனிடம் சென்று நின்றார். "கடனெல்லாம் கட்டிட்டன்னு அதோட என்னை மறந்துட்டல்ல புகழு? அம்மா என்ன செய்யிறேன்னு பார்க்க கூட வரலையே!" என்று கண்ணீரை முந்தானையில் துடைத்தார். புகழுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் வீட்டில் நல்ல விஷயங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இப்பொழுது இவரோடு சண்டையிட்டு நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. அதனால் அவன் அமைதியாக நின்றான். "இரண்டு நாள் முன்ன வீட்டு ஓனர் வந்திருந்தாரு புகழு. அவருக்கு ஏதோ புது வீ...