சாரல் 57 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 57 அன்று புகழின் கடைக்கான உள் அலங்கார வேலைகள் முடிவுக்கு வந்திருந்தது. இரவு வீட்டுக்கு திரும்பிய எழிலும் ரவியும் சற்றே சோர்வுடன் காணப்பட்டனர். "ஏங்க உங்க சேனல் வீடியோ இன்னிக்கு போடணும்ல ரெடி பண்ணியாச்சா?" என்று கேட்டபடி அன்றைய இரவுக்கு பழ சால்ட் செய்ய பழங்களை நறுக்கியபடி வினவினாள் எழில். சோர்வாய் கையை உயர்த்தி சோம்பல் முறித்த ரவீந்தர், "இல்ல இசை, புகழ் கடையோட வேலை முடியணும். அதான் இப்போ முதல் பிரியாரிட்டி. அப்ப தான் நாம நம்ம பிளானுக்கு வர முடியும்." என்று கூறி அவள் மடியில் தலை சாய்த்துப் படுத்தான். "அவன் வேலை நமக்கு முக்கியம் தான் ஆனா நம்ம வேலையும் அதே அளவுக்கு இல்ல, அதை விட முக்கியம் சன்ஷைன். இந்தாங்க, இந்த சாலட் சாப்பிட்டுட்டே லேப்டாப் ஓபன் பண்ணி எடிட்டிங் வேலையை ஆரம்பிங்க. நான் போய் பால் எடுத்துட்டு வர்றேன்." என்று அவனை எழுப்பி அவன் கையில் பழக்கலவையை திணித்து விட்டு எதிரில் இருந்த கவுண்ட்டர் டாபில் அடுப்பை பற்ற வைத்து பாலைக் காய்ச்சலானாள். அவளை வியப்பாக பார்த்தபடி பழங்களை உட்கொண்ட ரவிக்கு அவள் அ...