சாரல் 55 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 55 ஶ்ரீதரன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். மகனும் மருமகளும் மறுவீடு சென்று ஒருநாள் கழிந்த நிலையில் சரோஜா அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. அதோடு அவர் வேலை நேரத்தை நீட்டிப்பு செய்து வீடு வந்ததே இரவு ஒன்பது மணிக்கு தான். வீட்டில் தனிமையில் அமர்ந்திருந்த ஶ்ரீதரன் உள்ளம் தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தும் அவளை அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டு இருந்தாலும் தான் தன் மகளுக்கு எதுவும் உரிமையாக மணம் முடித்த மகளின் தகப்பனாக செய்முறைகள் செய்ய இயலவில்லையே என்று மன சோர்வு அடைந்திருந்தார். தாமதமாக வீட்டிற்கு வந்த சரோஜா அவரை கண்டுகொள்ளாமல் பின்னால் சென்று முகம் அலம்பி விட்டு வந்து, "எழிலு காபி கொண்டா" என்று அதிகாரமாக கேட்க, ஶ்ரீதரன் அமைதியாக நிலைக்காலில் அமர்ந்து மனைவியின் செய்கையைப் பார்த்திருந்தார். பெருமூச்சு ஒன்றை விட்டு சேலைத் தலைப்பால் முகம் கழுத்து என்று துடைத்து நிமிர்ந்த சரோஜாவுக்கு தாமதமாகவே எழில் வீட்டில் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. உச்சுக் கொட்டி எழுந்து கொண்டவர், அடுப்படியில் நுழைய, அது ஏதோ ய...